குஜராத்: காவல் நிலையத்தில் பணி நேரத்தில் குத்தாட்டம் போட்ட பெண் போலீஸ் ஒருவர் டிக் டாக் வீடியோவால் சிக்கிய சம்பவம் நிகழ்ந்தேறி இருக்கிறது.
குஜராத் மாநிலம் மஹேசேனா பகுதியை சேர்ந்த லந்த்லாஜ் காவல் நிலையத்தில் கான்ஸ்டெபிளாக பணியாற்றிவந்தவர் அர்பிதா சவுத்ரி. இவர் பணி நேரத்தில் சீருடையில் இல்லாமல், காவல் நிலையத்தில் குத்தாட்டம் போடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
கடந்த ஜுலை 20ம் தேதி இவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் காவல் நிலையத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பலரும் குறிப்பிட்ட வீடியோவை பகிர துவங்கினர்.
இது குஜராத் காவல் துறை கவனத்திற்கும் சென்ற நிலையில், ஒழுங்கு நடவடிக்கையாக அர்பிதா சவுத்ரி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
Lady police constable in Mahesana district of North Gujarat faces disciplinary action after her TikTok video shot in police station goes viral pic.twitter.com/7NWXpXCh8r— DeshGujarat (@DeshGujarat) July 24, 2019
Social Plugin