திரையுலகம் மட்டுமல்லாது, சாதாரண மக்களும் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து, தனது சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சினிமயி.
அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில், வாலிபர் ஒருவர், பள்ளி நண்பனாலேயே ஓரின சேர்க்கை தொல்லைக்கு ஆளானது குறித்து பகிர்ந்திருந்தார்.
குறிப்பிட்ட நபர், விளையாட்டு ஆசிரியர் குறித்து கேலியாக பேச, 'அதனை அந்த ஆசிரியரிடம் சொல்லி விடுவேன்' என மிரட்டி காரியம் சாதிக்க ஆரம்பித்திருக்கிறார் சக மாணவர்.
ஆரம்பத்தில் தன்னை சிறு சிறு காரியங்களுக்கு பயன்படுத்திய அவர், பிறகு பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ததுடன், வீட்டிற்கு வரவழைத்து கற்பழித்ததாகவும், வெளியே சொன்னால் ஆசிரியரிடம் சொல்லிவிடுவதாக கூறி மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
வேறு வழியின்றி இதனை, தனது தந்தையிடம் கூற, அந்த காம ஆசாமியின் கன்னத்தில் அவர் விட்ட அறைதான் தன்னை காப்பாற்றியதாகவும் சின்மயியுடன் பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர் பகிர்ந்திருந்தார்.
இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர், பெண்கள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
Trigger warning.
— Chinmayi Sripaada (@Chinmayi) February 22, 2019
I got this message from a boy being bullied and sexually abused by a classmate.
Men need to start talking. About abuse that happens to you from other men. pic.twitter.com/1kjsTC1bAD
Social Plugin